தருமபுரி, நவ.15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், நகர பஞ்சாயத்துகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வர்களையும் இணைக்க வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் மருத்துவர் எஸ். செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மத்திய பஞ்சா யத்து ராஜ், உணவு பதப்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாய நலன் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமருக்கு, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ். செந்தில்குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது, கிராமப் புறங்களில் நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தினை மத்திய அரசு 2005-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அத்திட்டத் தினை நகர்ப்புற பஞ்சாயத்துகளில் உள்ளவர்களையும் இணைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் மேலும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை தருமபுரி நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பி.மல்லாபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, கொளத்தூர், பி.என்.பட்டி, வீரகால்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகர்புற பஞ்சாயத்துகளில் கிரா மப்புற சாலைகள் மற்றும் அரசாங்க நிதியின் மூலமாக கட்டப்படும் பள்ளி கள், அங்கன்வாடி மையங்கள் ஆகி யவை சோதனை முயற்சியாக தொடங்க வேண்டும் என்றும் தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்து வர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.