tamilnadu

img

பாலக்கோட்டில் பாதியில் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் சுகாதார சீர்கேடு

தருமபுரி, அக். 17- பாலக்கோடு நகரத்தில் பாதாள சாக் கடை திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூ ராட்சியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கடந்தாண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப் பட்டு பணி துவங்கப்பட்டது. தற்போது இந்த பணியானது திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், வீடு மற்றும் வணிக நிறுவங்களில் இருந்து வெளியே றும் கழிவு நீர் , கால்வாய் இல்லாததால் திறந்த வெளியில் தேங்கி நிற்கிறது.

குறிப் பாக  தக்காளி மார்கெட் மற்றும் புறவழிச் சாலை பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது, பருமழை துவங்கிய நிலை யில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதியில் மழைநீரும் சேர்ந்து குளம் போல் கழிவுநீர் தேங்கி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வே ண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.