tamilnadu

img

துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி,  மே 23- கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டியில் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் மருத்துவ வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8லட்சம் செலவில் துணை சுகாதாரநிலைய கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. தற்போது இந்த துணை சுகாதார நிலையத்தின் ஜன்னல்கள், கதவுகள் சேதமடைந்து உள்ளன. மேலும்,சமூக விரோதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.இதனால், இங்குள்ள கர்ப்பிணிபெண்கள், சிறுவர், சிறுமிகள் மருத்துவ வசதிக்காவும், தடுப்பூசிகள் போடுதல் உள்ளிட்ட மருத்துவ சேவைக்காக சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள கடத்தூர், பொம்மிடி, ராமியணஹள்ளி ஆகிய பகுதிக்கு செல்லும் நிலையுள்ளது.எனவே, புட்டிரெட்டிப்பட்டியில் சேதமடைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைப்பு செய்து மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.