tamilnadu

அரூர் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

தருமபுரி, செப். 2- அரூர் அருகே, காட் டாற்றின் குறுக்கே தடுப் பணை கட்ட வேண்டும் என  விவசாயிகள் மாவட்ட நிர் வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நரிப்பள்ளி அருகே, காட்டாறு செல் கிறது. இங்கு மழைக் காலங் களில் வனப்பகுதிகளில் இருந்து வரும் நீரால், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டு வதன் மூலம் நரிப்பள்ளி, பெரியப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள 1,500க்கும் மேற் பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசையும் வலியு றுத்தியுள்ளனர்.

;