tamilnadu

img

வட்டியில்லா கடன் வழங்கிடுக- மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.5- கொரோனா காலத்தில் வட்டி யில்லா கடன் வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சனியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனுக் கான தவணையை கட்ட கால அவ காசம் வழங்க வேண்டும்.சுய உத விக் குழுக்கள் வாங்கிய கடனுக் கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண் டும்.

அரசு மற்றும் கூட்டுறவு வங்கி கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி டேக்கீஸ் பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆயிஷா ஜாஸ் மின் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எஸ்.கிரை ஸாமேரி, மாவட்ட துணைத் தலை வர் கே.பூபதி, பிடமனேரியில் தமிழ் மணி, எம்ஜிஆர் நகரில் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, தருமபுரி ஒன்றி யத்தில் ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்டத் துணைத்தலைவர் பி. கிருஷ்ணவேணி ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் திரளானோர் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

கோவை

கோவையில் பல்வேறு மையங்க ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதி மணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி ஆவேச முழக்கங்களை எழுப் பினர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசௌந்தரி, தாலுகா செயலாளர்கள் க.பெருமா, எஸ்.எம்.தேவி, மாவட்ட துணைத் தலைவர் வைரமணி, நிர்வாகிகள் ரேணுகா, லலிதா உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.