tamilnadu

img

ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்க அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.14- ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்ய வலியு றுத்தி அகில இந்திய அஞ்சல்  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி தலைமை  தபால் நிலையம் முன்பு  வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வு பெற்ற தபால்காரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தாமதமில்லாமல் மறு நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவைத் தொகை  உடனடியாக வழங்க வேண்டும். கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஜூன் 30ஆம் தேதி முதல் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கி ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும்.பாதுகாப்பு துறையில் வழங்கியது போல் 2006 ஆம் ஆண்டு முதல் எம்ஏசிபி வழங்க வேண்டும். தேர்வின்மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் எம்ஏசிபி  வழங்க வேண்டும். நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு அனுப்புவதுபோல் ஓய்வூ தியர்களுக்கு மருந்துகளை விரைவு தபால்  மூலம் அனுப்பவேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.சுப்பிர மணியன், பொருளாளர் எஸ்.சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகி பி.சங்கு உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.