tamilnadu

img

மக்களை ஒன்றுபடுத்தும் கருவி தாய்மொழி

இந்துத்துவா சக்திகளிடமிருந்து நமது மொழிகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம் : ஏ.விஜயராகவன்

சென்னை,நவ. 6 இந்துத்துவா சக்திகளிடமிருந்து தாய்மொழியை பாதுகாப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், கேரள இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாளருமான ஏ.விஜயராகவன்  கூறினார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்   செவ்வா யன்று (நவ.5) மாலை சென்னை, காம ராஜர் அரங்கில் “தாய் மொழி பாது காப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநி லங்களின் மாநாடு” எழுச்சியுடன் நடை பெற்றது.

இம்மாநாட்டில் தமிழக மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க நடை பெறும் இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்தி மொழி தான் தேசிய மொழியாக இருக்கும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு தற்செயலானது அல்ல. இந்தி பேசாத மாநிலங்கள் மீது அம் மொழியை கட்டாயம் திணிக்கும் உள்நோக்கம் அதன் பின்னணியில் உள்ளது. காஷ் மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு  அந்தஸ்தை நீக்கக்கோரும் தீர்மா னத்தை மாநிலங்களவையில் அமித்ஷா   திடீரென முன்மொழிந்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த அன்றைய அலுவல்  களில் அது இல்லை. இதேபோலத்தான் மற்ற மாநிலங்கள் மீது  இந்தியை கட்டாயமாக்க அவர்கள் எதையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள்.  இவை அனைத்தும் மத்திய பாஜக அரசின் மறைமுக செயல் திட்டங்கள் ஆகும்.

சுதந்திரப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தலைவர்களும் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கொண்டிருந்த போது பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்ற சியமா பிரசாத் முகர்ஜி இந்தி திணிப்பை ஆதரித்தார். எனவே  அமித்ஷா தற்போது இந்த முழக்கத்தை தற்செயலாக எழுப்பவில்லை. இந்துத் துவா சக்திகள் ஒரே மொழி,ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை திட்டமிட்டு நம்மீது திணிக்க முற்படுவதன் தொடர்ச்சிதான் இது. அமித்ஷாவுக்கு அசோகர், அக்பர், காந்தி, நேரு ஆகியோரைப் பிடிக்காது. காரணம், அவர்கள் மதச்சார்பற்ற குணம் கொண்டவர்களாக விளங்கி னர். உலகில் உள்ள 35 முன்னணி மொழிக ளில் நமது நாட்டில் தென்னிந்திய மக்கள் பேசும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை முக்கியமான மொழிகள் ஆகும்.

சுதந்திரப்போராட்டத்தின் போது மக்களை ஒன்றுபடுத்த கம்யூனிஸ்டுகள் மாநில மொழிகளை ஒரு கருவியாக பயன்படுத்தினர். சுதந்திரத்திற்கு பின்னர் அந்த மொழியின் அடிப் படையில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக போராடினர். எனவேதான் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உருவாகின. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்கள் விரோத கொள்கைகளை தீவிர மாக  அமல்படுத்தி வரும் மோடி அரசை  எதிர்த்து இடதுசாரி கட்சிகள் உறுதியாக  போராடி வருகின்றன. நமது நாடாளு மன்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும்  மக்களை திரட்டி போராடுவதன் மூலமாக மத்திய ஆட்சி யாளர்களின்  மக்கள்விரோத தொழி லாளர் விரோத கொள்கைகளை முறியடிக்கவேண்டும். 

தாய்மொழியைப் பாதுகாக்க நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டை நடத்தியிருப்பது பொருத்தமான நடவடிக்கை மட்டு மல்ல, சரியான திசை நோக்கிய  நட வடிக்கையும் ஆகும். தொடர்ந்து மக்க ளைத் திரட்டி இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி,  இந்துத்துவ சக்திகளி டமிருந்து நமது தாய்மொழிகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம். இவ்வாறு விஜயராகவன் பேசினார்.