பென்னாகரம், மார்ச் 19- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. பென்னாகரம் நகரம், பென்னாகரம் பகுதி குழு, சின்னம்பள்ளி பகுதி குழு, ஏரியூர் ஒன்றிய குழு, பாப்பாரப்பட்டி பகுதி குழுக்களின் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.தங்கவேல், மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், சோலை அருச்சுணன், வே.விஸ்வநாதன், மாவட்ட குழு உறுப்பினர் பி.எம்.முருகேசன், எம்.குமார், பென்னாகரம் நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி, பகுதி செயலாளர் கே.அன்பு, சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளர் சக்திவேல், பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக பென்னாகரம் பகுதி குழுவின் சார் பில் 41 சந்தாக்களும், பென்னாகரம் நகரக் குழுவின் சார்பில் 24 சந்தாக்களும், சின்னம்பள்ளி பகுதி குழு வின் சார்பில் 16 சந்தாக்களும், பாப்பாரப்பட்டி பகுதி வின் சார்பில் 28 சந்தாக்களும், ஏரியூர் ஒன்றிய குழு வின் சார்பில் 5 சந்தாகள் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேலு-விடம் வழங்கப்பட்டது.