தருமபுரி, அக். 21- இண்டிகரா எக்ஸ்போர்ட் லிமி டெட் ஆலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வலியு றுத்தி தொழிலாளர்கள் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்துக்கு ஆதரவாக சிஐ டியு சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அதகப் பாடி அருகே செயல்பட்டு வரும் இண்டிகரா எக்ஸ்போர்ட் நிறுவ னம், கொரோனா ஊரடங்கை கார ணம்காட்டி ஏப்ரல் மாத ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்க மறுத் தது. இதுதொடர்பாக முதலமைச் சரின் தனிபிரிவு மற்றும் தொழிலா ளர் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் மாத ஊதியத்தை நிர்வாகம் வழங்கிய நிலையில், தொழிலாளர்களை பழிவாங்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளது. இதனைக் கண்டித்து அந்நிறுவன தொழிலா ளர்கள் சிஐடியு சங்கத்தின் தலை மையில் கடந்த மூன்று தினங்களாக குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இத்தொழிலா ளர்களுக்கு ஆதரவாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார் பில் தருமபுரி தொலைபேசி நிலை யம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், மாநில குழு உறுப்பி னர்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி, மாவட்ட நிர்வாகிகள் பி.ஆறுமுகம், சி.ரகுபதி, அங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்சியரை சந்திக்க அனைத்து கட்சிகள் முடிவு
இதற்கிடையே, தருமபுரியி லுள்ள திமுக அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை யில் திமுக தோழமைக் கட்சிகள் பங்கேற்றக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட் டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், ஒன்றிய செயலா ளர் என்.கந்தசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்க ராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவரா சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் த. ஜெயந்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் யாசின்தென் றல் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், இண்டிகாரா நிறுவனம் ஆட்குறைப்பைக் கைவிட்டு தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இக் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிப்பது என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.