தருமபுரி, மார்ச் 7- தருமபுரி மாவட்டத்தில் வறட்சி யால் மா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கோடை வெயில் மற்றும் வறட்சியினால் தண்ணீர் இன்றி மா பூக்கள், மாங்காய் பிஞ்சுகள் உதிர்ந்து வருவதால் மகசூல் பாதிக் கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், ஜிட்டாண்ட அள்ளி, அண்ணா மலைஅள்ளி, குண்டாங்காடு போன்ற பகுதி யில் செந்துரா,பெங்களூரா, அல் போன்சா, பீத்தர், மல்கோவ, நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற் பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு விளையும் மாம்பழங்கள் வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே போல் மா வகைகளை கொண்டு மாங் கூழ் தயார் செய்ய 10க்கும் மேற் பட்ட தொழில்சாலைகள் இயங்கி வருகின்றது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாம்பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் வறட்சியின் காரண மாக மாபூக்கள் குறைந்த அளவே பூத்து உள்ளது. மேலும் இப்பகுதி யில் கோடை வெயில் தாக்கம் மற்றும் கடுமையான வறட்சியி னால் மாம்பூக்கள் கருகி கீழே விழு கின்றன. இதனால் நடப்பாண்டில் மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இத னால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். எனவே இப்பகுதியில் நீர்பாசன திட்டத்தை நிறைவேற்றி மா விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.