தருமபுரி, ஜூலை 3- நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டில் சேர்ந்த 1 ஆம் வகுப்பு மாணவி யிடம் ரூ.20 ஆயிரம் கல்வி கட்டணம் கட்டக்கோரி தனியார் பள்ளி நிர்வாகம் வெளியேற்றிய கொடுமை பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி நகரம் 3-வது வார்டு காமாட்சித்தெருவைச்சேர்ந்தவர் சின்ன ழகி-தங்கதுரை தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள னர். இவர்கள் கூலி தொழில் செய்து வரு கின்றனர். இத்தம்பதியின் மகளான விஜியதர்ஷணி தருமபுரியில் உள்ள செந்தில் மெட்ரிக் பள்ளியில் தற்போது 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கட்டாய கல்வி உரிமை சட்ட விதிமுறை களின்படி 25 சதவிகித அரசு ஒதுக்கீடு பிரிவில் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசின் சட்ட விதிமுறை களுக்கு மாறாக கல்வி கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை உடனடியாக கட்ட வேண்டும். இல்லையென்றால் பள்ளியை விட்டு செல்லுமாறு கூறி குழந்தையை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாயார் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்து புகார் அளித்தார். அப் போது அவர் கூறுகையில், என் மகளை அரசு ஒதுக்கீட்டில் செந்தில் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி,யூகேஜி படிக்க வைத் தேன். தற்போது 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் என் மகளின் பள்ளி டைரியில் ஸ்கூல் பீஸாக 20 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். கட்டவில்லை என்றால் பள்ளியில் வழங்கிய சீருடையை திரும்பதர வேண்டும். மேலும் ஸ்கூலுக்கு இனிமேல் வரக்கூடாது என எழுதி அனுப்பி யுள்ளனர். ஆகவே, எனது மகளை வெளி யேற்றிய தனியார் பள்ளி நிர்வாகம் மீதும், கல்வி கட்டணம் இல்லாமல் எனது மகள் படிக்கவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்த தாக தெரிவித்தார்.