தருமபுரி, ஜன. 19- தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்தும் நீர்வரத்தின்றி இலளிகம் ஏரி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், இலளிகம் ஏரிக்கு மழைக்காலங்க ளில் கோம்பை ஏரியில் இருந்து நீர்வரத்து இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இலளிகம் ஏரிக்கு நீர்வ ரத்து குறைந்து கொண்டே வந்த நிலையில், தற்போது முற்றி லும் நீர்வரத்து நின்று விட்டது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நல்ல மழை பெய்திருந்த போதும், இலளிகம் ஏரிக்கு நீர்வ ரத்து இல்லை. கோவிலூர் ஏரி, அதியமான் கோட்டை ஏரி, ஜெட்டி அள்ளி ஏரி, தடங்கம் ஏரி உள்ளிட்ட பல ஏரி கள் நிரம்பிய போதும் இலளிகம் எரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். அப்பனஅள்ளி கோம்பைக்கு மேல் உள்ள குப்பாகவு ண்டர் ஊற்று மாமரத்துப்பள்ளம் செல்கிறது. எனவே, இல ளிகம் ஏரிக்கு வரவேண்டிய நீர் திசைமாறி செல்கிறது. எனவே, வனத்துறைக்கு சொந்தமான குப்பாகவுண்டர் ஊற்று நீர் வரும் இடம் அருகே, 200 அடி நீளத்திற்கு தடுப் பணை கட்ட வேண்டும். அப்போது தான் இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து வரும். மேலும், இனிவரும் காலங்களிலாவது இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து வருமாறு செய்து இந்த பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.