போக்குவரத்து கழகத்தில் 118 நபர்களுக்கு பணி நியமன ஆணை
தருமபுரி, பிப்.8- போக்குவரத்து கழகத்தில் 118 நபர்களுக்கு பணி நியமன ஆணையை உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகன் சனியன்று வழங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்ட லத்தில் பணிபுரிந்து பணியின்போது இயற்கை எய்திய பணி யாளர்களின் வாரிசுதாரர்கள் 7 நபர்களுக்கும், சேம ஓட்டுனர்களாக உள்ள 111 நபர்களுக்கும் ஆக மொத்தம் 118 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புகையிலைப் பொருள் விற்ற 18 போ் கைது
தருமபுரி, பிப்.8- தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 18 பேரை போலீஸார் கைது செய்தனா். அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதி களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து, காவல் துறையினா் கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோபி நாதம்பட்டி, அரூா், கோட்டப்பட்டி, மொரப்பூா் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோத னையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்ததாக சரவணன் (28), தட்சிணாமூர்த்தி (67), கோபி (44), முனியசாமி (42), மனோகரன் (60), நாகராஜ் (60), காதா் (31), சதீஷ்குமார் (32), சாகுல் (34) உள்ளிட்ட 18 பேரை போலீசார்் கைது செய்தனா்.