tamilnadu

img

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

 தருமபுரி, ஜூலை 5- மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினக்கூலி வழங்கக் கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தருமபுரி மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும். கேங்மேன் பதவிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு தளர்த்தி முன்னுரிமை வழங்க வேண்டும். ஒப் பந்தப் பணியாளர்களுக்கு மின்வாரிய பணியின்போது ஏற்படும் விபத்துகளுக்கான மருத்துவ செலவினங்களை மின்வாரியமே வழங்க வேண்டும். மின்வாரியத்தில் அனைத்து களப்பணிகளிலும் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தி விட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களே எங் கள் திட்டத்தில் இல்லை என்று மின்வாரியத்துக்கு அறிக்கை அனுப்பக்கூடாது என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ஜிவா, பொருளாளர் எம். ஜெயக்குமார், கோட்ட செயலாளர்கள் தருமபுரி ஜி.சக்தி வேல், பாலக்கோடு பி.சி.முனிராஜ், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டசெயலாளர் ஜி. பி.விஜியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டசெயலாளர் சி.நாகராசன் நிறைவுரையாற்றினார். துணை தலைவர் வி.சீனிவாசன் நன்றி கூறினார்.