பென்னாகரம், அக்.31- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பென் னாகரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. பென்னாகரம் நகரம், சுண்ணாம்பாறு தெருவில் நடைபெற்ற நிகழ்விற்கு நகரக் குழு உறுப்பினர் சபரி ராஜன் தலைமை வகித்தார். செங்கொடியை மாவட்ட செயலா ளர் ஏ.குமார் ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. இளம்பரிதி, வி.மாதன், வே.விஸ்வநாதன், நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி, பகு திக்குழு செயலாளர்கள் அன்பு, சக்திவேல், எம்.பி.முருகன், சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பென்னா கரம் நகரப்பகுதிக்குட்பட்ட நீர்குந்தி மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா எழுச்சியுடன் நடை பெற்றது.