தருமபுரி, மே 28-தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் புதனன்று நடைபெறவுள்ளது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் பா.சீ.செண்பகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுகூட்டம் இன்று (மே 29) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலந்தாய்வில்பத்தாம் வகுப்பில் 261 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதேபோல், 261க்கு குறைவாக மதிப்பெண் பெற்று விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மே 30 ஆம் தேதி பங்கேற்கலாம். மேலும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பாணை அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை கிடைக்க பெற்ற மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தொகையுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளர்.