tamilnadu

img

மறு வாக்குப்பதிவு பாதுகாப்பில் 600 காவல்துறையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, மே 18-தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு பாதுகாப்பில் 600 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி செய்தியாளர்களிடம் பேசுகையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மே 19 ஆம் தேதியன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி,நத்தமேடு, ஜாலிபுதூர் ஆகிய பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாணை குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவை அமைதியான முறையில் சுதந்திரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் சனியன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்பு உடன் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மறுவாக்குப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் தலா மூன்று வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இடைவெளியில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் பதிவு செய்யப்படுகிறது. 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சி.சி.டிவி கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், 8 வாக்குச்சாவடிகளிலும் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும்.தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 566 காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 24 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.