தருமபுரி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவையையொட்டி வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.தருமபுரியில் மாநில பிரதிநிதித்துவ பேரவை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மாநிலச் செயலாளர் கோ.பழனியம்மாள், பொருளாளர் மு.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வரவேற்புக்குழுவின் தலைவராக சி.நாகராசன், ஒருங்கிணைப்பா ளர்களாக கோ.பழனியம்மாள், எம்.சுருளிநாதன், செயலாளராக ஏ.சேகர், பொருளாளராக கே.புகழேந்தி மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.