tamilnadu

img

தமிழ் வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கிறது சிபிஎம்

நாளை தமிழ்நாடு உதயமான தினம்

சென்னை, அக். 30- நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம் உதயமான தினம். இந்த நாளை தமிழ் வளர்ச்சி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாட முடிவு செய்துள்ளது. இதையொட்டி வெள்ளியன்று தமிழகம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சியை முன்னிறுத்தி கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மொழி வழி மாகா ணங்கள் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்தது. இதை முன்னெடுத்துச் சென்றதில் கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழி மாகாணம் அமைக்க மறுத்த நிலையில், மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கவும், அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி அடையவும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவும் பொருத்தமாக இருக்கும் என்று அழுத்த மாக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் தடியடிகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள். மாநில மறுசீரமைப்பு கமிஷனில் இதற்காக நாடு முழுவதும் கோரிக்கை மனுக்களை அளித்தது கம்யூனிஸ்ட் கட்சி. இந்தப் பின்னணியில்தான் 1956 ம் ஆண்டு மொழிவழி மாநில அடிப்படை யில் சென்னை மாகாணம் உதய மானது.

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மொழி வழி மாகா ணங்கள் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்தது. இதை முன்னெடுத்துச் சென்றதில் கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழி மாகாணம் அமைக்க மறுத்த நிலையில், மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கவும், அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி அடையவும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவும் பொருத்தமாக இருக்கும் என்று அழுத்த மாக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் தடியடிகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள். மாநில மறுசீரமைப்பு கமிஷனில் இதற்காக நாடு முழுவதும் கோரிக்கை மனுக்களை அளித்தது கம்யூனிஸ்ட் கட்சி. இந்தப் பின்னணியில்தான் 1956 ம் ஆண்டு மொழிவழி மாநில அடிப்படை யில் சென்னை மாகாணம் உதய மானது.

சென்னை மாகாணம் அமைக்கப் பட்ட பின்னரும் அதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட மறுத்துவிட்ட நிலையில், இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான திருத்த மசோதாவை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி. இத்தகைய போராட்டத்திற்கு பின்னரே 1969ம் ஆண்டு அண்ணா அவர்களால் தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப் பட்டது. ஆனால், இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மொழிவழி மாநிலங்கள் என்ற கட்டமைப்பை சிதைத்து வரு கிறது. அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மத்திய அரசு, அதிகாரங் கள் பறிக்கப்பட்ட பலவீனமான மாநில அரசுகள் என்ற நிலை ஏற்படுத்தப்படு கிறது. கல்வி, சுகாதாரம், நிதி ஆதாரம் என அனைத்திலும் மாநிலங்கள் வஞ் சிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங் களும் மத்தியில் குவிக்கப்படுகின்றன.

சென்னை மாகாணம் அமைக்கப் பட்ட பின்னரும் அதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட மறுத்துவிட்ட நிலையில், இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான திருத்த மசோதாவை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி. இத்தகைய போராட்டத்திற்கு பின்னரே 1969ம் ஆண்டு அண்ணா அவர்களால் தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப் பட்டது. ஆனால், இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மொழிவழி மாநிலங்கள் என்ற கட்டமைப்பை சிதைத்து வரு கிறது. அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மத்திய அரசு, அதிகாரங் கள் பறிக்கப்பட்ட பலவீனமான மாநில அரசுகள் என்ற நிலை ஏற்படுத்தப்படு கிறது. கல்வி, சுகாதாரம், நிதி ஆதாரம் என அனைத்திலும் மாநிலங்கள் வஞ் சிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங் களும் மத்தியில் குவிக்கப்படுகின்றன.

அரசியல் சாசனத்தின் 8-வது அட்ட வணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக மாற்றுவதற்கு பதி லாக, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி கள் வம்படியாக திணிக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் தொன்மைக்கு கீழடி போன்ற அகழ்வாய்வுகள் சாட்சி சொல்கின்றன. அனைத்துத் துறை களிலும் அன்னைத் தமிழை அரி யணை ஏற்றவும், மொழி வழி மாநில கட்டமைப்பு பாதுகாக்கப்படவும், மாநி லங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெறவும், பயிற்று மொழி மற்றும் வழக்காடு மொழியாக தமிழைகொண்டு வரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள விரிவானதொரு பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.