சுகாதாரத்துறை அமைச்சர் சொல்கிறார்
புதுக்கோட்டை,செப்.22- தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்று சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்ன வாசல், இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து, முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட் டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை களிலும் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பற்ற சூழலை அரசு உறுதிப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.