நாகையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
நாகப்பட்டினம், நவ.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு அலுவல கத்தில், சி.பி.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை அன்று, செய்தியாளர் களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது- சொத்துவரி உயர்வு அரசால் அறிவிக்கப் பட்டது; அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. சர்க்கரை வழங்கப்பட்ட ரேசன் கார்டுக்குத் தற்போது வேண்டுமானால் அரிசி வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டே இந்த அறிவுப்புகள் வெளி யாகின்றன. மோடியின் மத்திய அரசின் மக்கள் விரோதப் பல்வேறு செயல்களால் தற்போது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார வீழ்ச்சி, இன்று 5 சதவீதம் வரை வந்துவிட்டது எனப் புள்ளி விவரங்களும் பொருளாதார நிபுணர்களும் அபாய அறிப்பாகத் தெரி விக்கின்றனர். மின்சார உற்பத்தி கடந்த 3 மாதங்களாக மிகவும் குறைந்து போய் விட்டது. இதுபோன்ற பல்வேறு காரணங் களால் தேசம் கடுமையான நெருக்கடியில் உள்ளது. ‘வண்டி ஸ்டார்ட் ஆகும், ஆனால், ஓடாது’ என்னும் நிலையில்தான் மோடி ஆட்சி உள்ளது.
கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி 40 சதவீதம் குறைந்து விட்டது என உண்மை அம்பலமாகி விட்டது. 100 நாள் வேலையை முறையாக அமல்படுத்தியிருந்தால் கூட கிராம மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கும். ஏழை எளிய மக்களைப்பற்றிக் கவலைப் படாமல், மோடி அரசு, ரூ. 2,1500- கோடி அளவிற்குப் பெரும் முதலாளிகளுக்காக வரிக் குறைவு செய்திருக்கிறது. பொதுத் துறைகள் எல்லாம் தனியாருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன. ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ரயில்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்படு கின்றன. இந்தாண்டு மட்டும் மேட்டூர் அணை 4 முறை முழுக் கொள்ளளவைக் கண்டு விட்டது. ஆனால், டெல்டா பகுதிகளில் கடை மடைப் பகுதிகளுக்கு ஏன் தண்ணீர் வர வில்லை? ஆறுகளும் வாய்க்கால்களும் நீர் நிலைகளும் தூர் வாரப்படவில்லை. எனவே, முதலில் நீர்நிலைப் பகுதிகளைத் தூர்வார வேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சாதியக்கொடுமை
நாகை மாவட்டத்தில் திட்டச்சேரிப் பகுதியில் ஒரு பெண், தலித் இளைஞரைக் காதலித்ததற்காக, அந்தப் பெண்ணின் தாய், தான் பெற்ற மகளையே உயிரோடு எரித்துக் கொன்று விட்டுத் தனக்கும் தீவைத்து அழிந்திருக்கிறாள். இந்த அளவுக்கு சாதிய வெறி வேரோடியிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாத தால், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர் களுக்கு அரசின் ஆதரவும் இல்லாததால் இப்படிப்பட்ட கொடிய சம்பவங்கள் நடை பெறுகின்றன. இப்படிப்பட்ட கொடுமை களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடும்.
அண்மையில் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபட்சே வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் இடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. எனவே, இலங்கையின் புதிய அரசு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் அச்சத்தைப் போக்கிப் பாது காப்பு அளிக்கவேண்டும். கடந்த காலங் களைப் போல் இல்லாமல், கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பற்ற தன்மையை நீக்கி இரு நாட்டு அரசுகளும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்யும் விதியைப் பேணித் தற்போதும் தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். இந்தப் பேட்டியின் போது, மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.