சென்னை, மே 17-கோட்சே விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய் யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். இதுகுறித்து பாரத பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஒரு இந்துதீவிரவாதியாக இருக்க முடியாது’’ என்று கூறியிருந்தார்.இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்,“ பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை. இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை’’ என்றார்.
பாஜகவினர் மீது வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிர வாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இத னால் ஆத்திரமடைந்த பாஜகவினர் . கமல்ஹாசன் பங்கேற்ற பிரச்சாரக்கூட்ட மேடையை நோக்கி செருப்பு, முட்டை, கல் எறிந்து ரகளை செய்தனர்.பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானப் படுத் துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.