வன்முறையில்லா - போதையில்லா தமிழகம், புதுச்சேரியை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வீராங்கனைகள் வெள்ளியன்று தங்களது ஐந்தாவது நாள் நடைபயணத்தை, ஒரு குழுவினர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், மற்றொரு குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையிலும் எழுச்சிமிகு பொதுக்கூட்ட நிகழ்வுகளில் நிறைவு செய்தனர். தங்களது நெடிய பயணத்தில் சாலையோரம் களைப்பு தீர ஆடிப் பாடி, தொடர்ந்து கோட்டையை நோக்கி முன்னேறுகின்றனர்.