சேலம், மே 28-சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 44வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்காக 10 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. வரும் 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.கண்காட்சி நடைபெறும் ஏற்காடு அண்ணா பூங்காவில் மேரிகோல்டு, ஜினியா, ஸ்னாப் ட்ராகன், கேலண்டுல்லா, ஆஸ்டர், டையான்தஸ் ஸ்வீட், சால்வியா, கோம்பரனா, செலோசியா கிரிஸ்ட், அல்லீசம் ஈஸ்டர், பெட்டூனியா, பான்சி, பாஸ்சம் டோம், கைலார்டியா மேசா, காஸ்மாஸ் சொனாட்டா உள்ளிட்ட21 வகையிலான 10 ஆயிரம்பூச்செடிகள் தயார் செய்யப் பட்டுள்ளன.