tamilnadu

img

மாநிலங்களிடையே போக்குவரத்து தளர்வு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை, ஜூன் 18- முழு ஊரடங்கு காலத் தில் மாநிலங்களுக்கு இடையேயான போக்கு வரத்து தளர்வு குறித்து  அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதி யுள்ள கடிதத்தில், “மாநி லங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பி னால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவை யில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு இடையே தொழில் ரீதியி லான போக்குவரத் துக்குத் தடை இல்லை. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களிலிருந்து வருவோ ருக்கான தடை உத்தரவு தொடரும். இந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம், நோய்ப்  பரவுவதைக் குறைப்ப தற்காக மாவட்டங்களின் உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.  அதே நேரத்தில் கட்டுப்  பாட்டுப் பகுதி, தனிமைப்ப டுத்தப்பட்ட வீடுகள் போன்ற வற்றில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகர காவல் துறை வரம்பு எல்லை பல அடுக்கு சோதனை மூலம் பலப்படுத்தப்பட வேண்டும். முக்கியமான இடங்களில் தடுப்புகளை வைப்பதன் மூலம் உள் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். வீட்டுச் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வீடுகள், கடுமையான கட்டுப்பாட்டுப் பகுதிகள், தனிமைப்படுத்தல் இடங்களில் அத்தியாவசிய பொருள்களின் சுமுக விநி யோகத்தை சமூக விழிப்பு ணர்வு மூலம் ஒருங்கி ணைத்தல் அவசியம். மேலும், தொற்று பரவு வதைக் குறைக்க சோதனை முடிவுகள் பெறும்வரை, அறி குறிகளுடன் சோதனைக்கு வரும் நபர்களின் தனி மைப்படுத்தலை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்தி லும் திறமையான தொடர்புத் தடமறிதல், அனைத்து வீட்டுத் தொடர்புகள், பிற  தொடர்புகள் உள்ளிட்ட வற்றில் நூறு விழுக்காடு  அடையாளம் கண்டுகொள்வ தையும் 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும். பரவும் நோய் குறித்து மக்களுக்கு அவர்களின் பொறுப்பு குறித்து கல்வி கற்பித்தல் அவசியம். தன்னார்வலர்களின் உதவியுடன் மண்டலக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் தனிமைப்படுத்தப் பட்ட நோயாளிகளின் வீட்டிற்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படு வதை உறுதிசெய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறுப வர்களுக்கு எதிராகக் கடு மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படும் நோயாளிகளுக்கு உளவி யல் ஆலோசனை அளிப் பதை உறுதிசெய்ய வேண்டும். கட்டுப்பாடு, தனிமைப்  படுத்தல் மேலாண்மை இயக்க கட்டுப்பாட்டை கண்  டிப்பாக அமல்படுத்துதல் வேண்டும். கட்டுப்பாட்டு  பகுதிகள், தனிமைப்படுத் தப்பட்ட வீடுகளுக்கு தன்னார்வலர்கள் மூலம்  அத்தியாவசிய பொருள் களின் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.