tamilnadu

img

இருசக்கர வாகன உதிரி பாகங்களில் உழவு இயந்திரம் வடிவமைத்த விவசாயி

தரங்கம்பாடி:
இரு சக்கர வாகனங்களின் பழையஉதிரி பாகங்களை கொண்டு உழவுஇயந்திரம் வடிவமைத்து விவசாயிஒருவர் சாதித்துள்ளார். செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்த நம்பிராஜ் என்பவர்தான் அந்த சாதனைக்குரியவர்.

ஊரடங்கால் விவசாயப் பணிகளை தடையின்றி செய்ய தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் மனம்தளராமல் பழைய மோட்டார் பாகங்களைக் கொண்டு ஒரு மினி டிராக்டரைஉருவாக்கியிருக்கிறார் நம்பிராஜ் என்றவிவசாயி. அவரின் புதிய கண்டுபிடிப்புவிவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்நம்பிராஜ். ஏழாம் வகுப்பு வரை மட்டுமேபடித்த இவர், இரு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில்,ஒரு ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இரண்டடி இடைவெளியில் உள்ள செடிகளுக்கு களை வெட்டவும், மண் அணைக்கவும் கூலி ஆட்கள்தேவைப்படுகிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை, இனி ஆட்களை நம்பாமல் இப்பணிகளைச் செய்வதற்கு ஒரு புதிய கருவியை செய்ய முடிவெடுத்தார்.பழைய இருசக்கர வாகன பொருட்களைக் கொண்டு ஒரு களை எடுக்கும்இயந்திரத்தை ஒரே மாதத்தில் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.இதுபற்றி நம்பிராஜன் கூறுகையில், ஒரு ஏக்கர் நிலத்தில் களை வெட்டுவதற்கு 18 ஆட்களுக்கு கூலி தர வேண்டியுள்ளது. இதற்கு சுமார் ரூ.4,000 செலவாகும். அதுபோல் செடிகளுக்கு மண்அணைப்பதற்கும் அதே செலவாகும். எனவே இரண்டடி இடைவெளியில் உட்புகுந்து உழவு செய்யவும், களை வெட்டவும், மண் அணைக்கவும் ஒருகருவியை உருவாக்க முடிவு செய் தேன். இதற்கு பழைய செட்டாக் எஞ்சின்,புல்லட் செயின் பிராக்கெட், வீல் இவற்றை வைத்து ஒரு மினி டிராக்டர் (களை எடுக்கும் இயந்திரம்) உருவாக்கியுள்ளேன்.

இதற்கு ரூ.15,000-ம்தான் செலவானது, ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 3 லிட்டர் பெட்ரோல் செலவில் 4 மணிநேரத்தில் களை வெட்டலாம், மண்அணைக்கலாம், உழவு செய்யலாம்,எனக்கு இப்போது ஆட்கள் தேவையில்லை. செலவு மிகவும் மிச்சம். இதைப் பார்த்த பல விவசாயிகள், “இதுபோல் எங்களுக்கும் தயாரித்துக் கொடுங்கள். எவ்வளவு ரூபாய்வேண்டுமானாலும் தருகிறோம்” என்று கேட்கிறார்கள். ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையில் செய்து கொடுக்க உள்ளேன் என்றார். மேலும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில்இதுபோன்ற கருவியை செய்துகொடுக்க அரசு உதவ வேண்டும் என்றுகோரினார்.

;