சென்னை, மே 31-தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் ஜூன் 3ஆம் தேதியன்று எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.2,381 அங்கன்வாடிகளில் ஜூன் 3ஆம் தேதியே ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும், அங்கன்வாடிகளில் எல்.கே.ஜிமற்றும் யூ.கே.ஜி வகுப்புகளைத் தொடங்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வைஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தொடக்கக்கல்வி இயக்குனரகம், அங்கன்வாடிகளைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மின் இணைப்பு, உள் கட்டமைப்பு வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்றும், வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் வாரந்தோறும், செவ்வாய்க்கிழமைகளில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் அங்கன்வாடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வு செய்து அறிக்கையை னநநயநடிநஎய@பஅயடை.உடிஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வாரந்தோறும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.