கல்வியில் முன்னேறிய தமிழ் சமூகம் எல்லா நாடுகளிலும் கல்வி திட்டம் தான் கொண்டுவருவார்கள். கல்வியை மேம்படுத்துவார்கள். எந்த நாட்டிலும் இல்லாத அது என்ன தேசிய கல்விக் கொள்கை? கல்விக்கு என என்ன கொள்கை வேண்டிக்கிடக்கிறது. கல்வி தொடர்பாக முதலில் நாம் நமது வரலாற்றை படித்தாக வேண்டும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி முறையில் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு வைக்கிறார்கள். எந்த நாட்டிலும் குழந்தைகளுக்கு தேர்வுகள் வைப்பதில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகத்தில் போற்றத்தக்க திருக்குறளை வள்ளுவர் எழுதினார். யாருக்காவது வள்ளுவர் எந்த சாதி என்று தெரியுமா,? உலகில் கல்வியில் தேர்ந்த சமூகம் என்றால் அது தமிழ் சமூகம் தான்.
-டி.கே.எஸ். இளங்கோவன், திமுக