tamilnadu

img

சென்னைவாசிகளை அனுமதிக்க வேண்டாம்...  தண்டோரா மூலம் அறிவிக்கும் கிராமங்கள்...  

தாம்பரம் 
தமிழகத்தின் தலைநகர் மண்டலமான சென்னை கொரோனாவால் கடுமையான சேதாரத்தை சந்தித்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் தினமும் பாதிப்பு மாற்றும் பலி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுவரை அங்கு 39,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 559 பேர் பலியாகியுள்ள நிலையில், 17,285 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னை மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் கொரோனாவால் திணறி வருகின்றன. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சில கிராமங்களில் தண்டேரா மூலம்,"கொரோனா வேகமாக பரவுவதால் சென்னை நகர மக்களை அனுமதிக்க வேண்டாம். மீறியவர்களை போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள்" என தண்டோரா மூலம் அறிவித்து வருகின்ற்னர். 

தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவுடன் டிரெண்ட் ஆகி வருகிறது.  

;