சென்னை, செப்.21- நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்த குமார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலை வர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கி ரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்த லில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என தெரி வித்தார். மேலும், புதுவையில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தலை சந்திக்கும் காமராஜ்நகர் தொகுதியில் காங்கி ரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.