tamilnadu

img

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

சென்னை,ஜூலை 18- மக்களின் நீண்ட நாளையை கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து  தென்காசியை தலைமையிட மாகக் கொண்டு ஒரு புதிய  மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு ஒரு  புதிய மாவட்டமும் உரு வாக்கப்படும் என்று முத லமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை யில் விதி எண்.110-ன் கீழ் முத லமைச்சர் எடப்பாடி பழனி சாமி வெளியிட்ட அறி விப்பில் “நூறாண்டுகள் நிறைவு செய்யும் விழுப்புரம் நகராட்சியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ரூ.50 கோடி செலவில் மேம்  பாட்டுப் பணிகள் மேற்கொள்  ளப்படும்” என்றார். மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பதில் அளித்த முதலமைச்சர் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய  புதிய மாவட்டங்க ளுக்கு விரைவில் தனி அதி காரிகள் நியமிக்கப்படு வார்கள் என்று கூறினார். முதலமைச்சரின் இந்த  அறிவிப்பை தொடர்ந்து மாநி லத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

;