தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பல்வேறு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய துவங்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸூம், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.