tamilnadu

img

செவிலியர் கவுன்சிலில் திருநங்கைகள் பெயரை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

செவிலியர் கவுன்சிலில் திருநங்கைகள் பெயரை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
செவிலியர் படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய திருநங்கை ரக்க்ஷிகா  ராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில்  விதிகளில் திருத்தம் கொண்டு வந்து பதிவுசெய்ய இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்  தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் வரை திருநங்கை ராஜின் பெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டார்.