tamilnadu

குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு சீட்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

மும்பை, ஜூன் 10- குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா தாக்குர் பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாத்வி பிரக்யாவை பாஜக வேட்பாளராக்கியது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் சாத்வி பிரக்யா ஆஜரானார்.  இதுகுறித்து, தற்போது  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார். அதில், மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு சீட்  கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சாடியுள்ளார்.