கோவை, ஜூலை 30– காரமடை எம்ஜிஆர் நகரில் பய னில்லாத அங்கன்வாடி மையத் திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி மையத்தை கட்டிக்கொடுக்க வலி யுறுத்தி மாதர் சங்கத்தின் தலைமை யில் ஏராளமான பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட் சுமி ஆகியோர் கூறுகையில், கார மடை அருகில் எம்ஜிஆர் நகர் உள் ளது. இங்கு ஐநூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இங்குள்ள மக்கள் கணவன், மனைவி இருவரும் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்கு சென் றால்தான் அடுப்பெரியும் என்கிற நிலை உள்ளது. ஆகையால் குழந் தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்ல சத்துணவுக் கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வும், மழை காலத்தில் விஷ பூச்சிக ளின் அபாயம் இருப்பதால், யாரும் அங்கு செல்லமுடியாத இடத்தில் உள்ளது. ஆகவே, இங்கு புதிய அங் கன்வாடி மையத்தைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்துள்ளனர். அதிகாரிகளும் ஆய்வு செய்து கட் டித்தருகிறோம், டென்டர் விடுகி றோம் என்று காலம் கடத்தி வரு கிறார்களே தவிர அங்கன்வாடி மையம் வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள் ளோம் என்றனர்.
பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, மாநகரின் பிரதான சாலைக ளான அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுபாளையம், பொள் ளாச்சி, சத்தி சாலைகளில் சிக்ன லுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களை மாற்றி அமைக்க வேண்டும், மக்கள் அதிகம் நடமாடும் சுங்கம், சுந்தரா புரம், ஈச்சனாரி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதால் பொதுமக்கள் அவதிப்படு கின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. முன்னதாக பிஎஸ்என்எல் ஒப் பந்த தொழிலாளர்கள் ஊதிய நிலு வைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.