கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதனை மீறி மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுவதால் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சனையில் சென்னை மாவட்ட ஆட்சியர் தலையிட கோரி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர், ஏ.ஆர.பாலாஜி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.