கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு
சென்னை, பிப். 5- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்க நடிகர் ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி யுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினி காந்த், ‘இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அரசியல் கட்சிகள் மக்களிடையே தவ றான பிரச்சாரத்தின் மூலம் பீதியை கிளப்பி வருகி றார்கள்” என்று கருத்து கூறியிருக்கிறார். எப்ப டியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவ தற்கு இக்கருத்து ஒன்றே போதும். ஆன்மீக அரசியல் என்ற முகமூடி இன்றைக்கு கிழித்தெறியப்பட்டி ருக்கிறது. யாருடைய உதவியும் இல்லாமல் தயவு செய்து இந்திய குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 இரண்டையும் தயவு செய்து படித்து ஒப்பிட்டுப் பாருங்கள். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., என்பவை ஒன்றுக்கொன்று தொடர்புடை யவை. இந்த மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. இதை அமல்படுத்தும் போது பாதிக்கப்படப்போ வது 17 கோடி முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, மூன்று கோடி கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, 83 கோடி இந்துக்க ளும் இதனால் பாதிக்கப்படப்போகிறார்கள்.
ஆதாரங்களை வழங்கி குடிமக்கள் பதி வேட்டில் இடம்பெறவில்லை என்றால், “சந்தே கத்திற்குரிய குடிமக்கள்” என்கிற முத்திரை குத்தப்ப டும். இதனால் தான் அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேர் இந்திய குடிமக்களே அல்ல, அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்துக்க ளும், முஸ்லிம்களும் அடங்குவர் என்பதை ரஜினி காந்த் அறிவாரா? இவர்களில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்பத்தாரும் உண்டு, கார்கில் போர் வீரரும் உண்டு, அசாமில் அமைக்கப்பட்டிருப்பதைப் போல தடுப்பு முகாம் களை இந்தியா முழுவதும் அமைக்க வேண்டு மென்று ரஜினிகாந்த் விரும்புகிறாரா? பொத்தாம் பொதுவாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆத ரித்து பேசுகிற ரஜினிகாந்தை தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை அவரே வழங்கி யிருக்கிறார்.அவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. இதன்மூலம் தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பா.ஜ.க. வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகி விட்டார். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் எந்த பாதையில் அவரை அழைத்துச் செல்ல வேண்டுமென்று அவரை இயக்குபவர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ, அந்தப் பாதையில் பயணிக்க ரஜினிகாந்த் தயாராகி விட்டார். இது வரை ரஜினிகாந்தை ஒரு நடிகராக பார்த்த தமிழக மக்கள் இனி பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவரை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.