tamilnadu

img

வடகிழக்கு பருவமழை 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று நின்று, கிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 17 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் இப்பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.
 

;