tamilnadu

img

மம்தாவின் ஆணவ வெறி அடங்கவில்லை!

வேலை கேட்டு பேரணி சென்ற இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்

கொல்கத்தா, செப்.14- இடதுசாரிகளுக்கு எதிராக மட்டு மல்ல, மேற்குவங்கத்தில் நீதி கேட்டு போராடுகிற எவரது குரலையும் சகித்துக் கொள்கிற மனநிலை, கடுமை யான தோல்வியை சந்தித்த பிறகும் கூட மம்தா பானர்ஜிக்கு உருவாக வில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூ பணமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாடியா மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாபுலால் பிஸ்வாஸை படுகொலை செய்த ரத்த வெறி திரிணாமுல் குண்டர்களுக்கும் அவர்களது ஏவல் காவல்துறைக்கும் அடங்கவில்லை; வேலைவாய்ப்பும், கல்வியும் கேட்டு அமைதியாக பேரணி நடத்திய இளைஞர்களையும், மாண வர்களையும் கொடூரமான முறையில் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் மாநி லம் முழுவதும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாளில் முடிந்திருக்க வேண்டிய இளைஞர்கள் - மாணவர்கள் போராட் டம், தாக்குதலுக்கு உள்ளானதால், தொடர்ந்து நீடிக்கிறது. மாநிலம் முழு வதும் தற்போது கண்டன பேரணிகள் நடந்து வருகின்றன.

முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய அந்த மாபெரும் போராட்டம் பற்றிய விபரம் வருமாறு: மேற்குவங்க மாநிலத்தில் சிங்கூரி லிருந்து, மாநில அரசின் தலைமைச் செய லகம் அமைந்துள்ள ஹவுரா நோக்கி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய மாபெரும் பேரணியில் மம்தா அரசின் காவல்துறையினரின் வன்முறை தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும், இளம் பெண்க ளுக்கும் மிக மோசமான அளவில் காயங் கள் ஏற்பட்டுள்ளன. இப்பேரணிக்கு இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும் பன்னிரண்டு இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளை ஞர்களின் அமைப்புகளுடன் இணைந்து அறைகூவல் விடுத்திருந்தன. செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடை பெற்ற இப்பேரணிக்காக செப்டம்பர் 11 இரவே பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சிங்கூரில் திரண்டனர்.  

அனைவருக்கும் கல்வி கேட்டும், அனைவருக்கும் வேலை கேட்டும் நடை பெற்ற இப்பேரணி குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் சாயான்தீப் மித்ரா, செய்தி யாளர்களிடம் கூறுகையில், “இப்பேர ணிக்கு இளைஞர்கள்-மாணவர்களிடமி ருந்து அபரிமிதமான முறையில் ஆதரவு கிடைத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. செப்டம்பர் 12 அன்று காலை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கூரிலிருந்து பேரணியாகப் புறப் பட்டனர். வழிநெடுகிலும் ஏராளமான இளைஞர்கள்-மாணவர்கள் பேரணி யுடன் தங்களை இணைத்துக் கொண்ட னர். 13ஆம் தேதி காலை எண்ணிக்கை மேலும் அதிகமாகியது. 13ஆம் தேதி யன்று ஹவுரா ரயில்நிலையத்திலி ருந்து, தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி சென்றது. பேரணியின் வெற்றி, மாநில அரசிடம் இளைஞர்கள்-மாண வர்கள் நம்பிக்கை இழந்திருப்பதன் அறி குறியாகும்,” என்றார்.

கொடூரத் தாக்குதல்

பேரணியின் இரண்டாம் நாளன்று பேரணியை நசுக்கிட, காவல்துறை யினர் பல இழிவான செயல்களில் ஈடு பட்டார்கள். தங்களுக்குத் தாங்களே குங்குமம் கரைத்த தண்ணீரை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு, பேரணியில் அமைதியாக வந்த இளைஞர்கள்-மாண வர்கள்மீது தடியடி நடத்தினார்கள், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி னார்கள். இவர்களின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். காவல் துறையினருடன் சேர்ந்து கொண்டு திரி ணாமுல் காங்கிரசைச் சேர்ந்த குண் டர்களும் பேரணியில் வந்தவர்கள்மீது கற்களை வீசி  தாக்குதலைத் தொடுத் தார்கள். இதனால் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தார்கள். எனினும் இவர்களின் தாக்குதல்களாலும், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சுகளாலும்  வீறுடன் முன்னேறிக்கொண்டிருந்த இளைஞர்கள்-மாணவர்களின் அணி வகுப்பைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை. முன்னிலும் வீராவேசத்துட னான முழக்கங்களுடன் முன்னேறிச் சென்றார்கள்.   தலைமைச்செயலகத்தின் அருகில் பேரணியில் வந்தவர்கள், தடுப்பரண்கள் மூலமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அங்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தலைவர்கள் ஆறுதல்

இந்நிலையில் காவல்துறை தாக்கு தலில் காயமடைந்தவர்களை பிமன் பாசு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெவித்தனர்.