tamilnadu

img

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகல்

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, வேதாந்தா நிறுவனம் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை தாமதமாவதாகக் கூறி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

ஆனால் உச்சநீதிமன்றம், ஸ்டொ்லைட் வழக்கை மாநில உயர் நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார்.
 

;