tamilnadu

எஸ்பிபி உடல் நிலையில் முன்னேற்றம்...

சென்னை:
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மகன் ஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார் ‌கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, சென்னை எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் படிப்படியாக குணமடைந்து வருவதாக கூறப்பட்டது.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து அவரது மகன் சரண் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், தனது தந்தை விரைந்து குணம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.மருத்துவர்கள் உதவியுடன் தனது தந்தை சில நிமிடங்கள் எழுந்து உட்கார்ந்ததாகவும், இயல்பாக உணவு உட் கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.பாலசுப்பிரமணியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சரண் தெரிவித்தார்.

;