மும்பை
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் நட்சத்திர நடிகையாகத் திகழும் நடிகை சமந்தா, திருமணத்திற்குப் பிறகு குறைவான படங்களில் அதாவது நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நடிப்பு வேலை இல்லாத நேரங்களில் மாடலிங் துறையில் ஆர்வமாக இருக்கும் சமந்தா, மும்பையில் நடைபெற்ற மாடலிங் தொடர்பான பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி நிறைவுபெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சமந்தாவிடம் செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டார்கள். சமந்தாவிற்கு இந்தி நன்றாக தெரியும் என்றாலும், ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார். இதற்கு விளக்கம் அளித்த சமந்தா,"நான் தென் இந்தியாவை சேர்ந்தவள். அதனால் மொழி சரளமாக இருக்காது என்பதால் இந்தியில் பேச மாட்டேன்” என்று கூறினார்.நாடு முழுவதும் இந்தியை ஒரே மொழியாக்கத் துடிக்கும் பாஜக அரசிற்கு சமந்தாவின் கருத்து பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் நடிகை டாப்ஸி இந்தியை என்னால் பேச முடியாது. தமிழ்,தெலுங்கு மட்டும் தான் பேசுவேன் கூறி இந்தி எதிர்ப்பாளராக அதிரடி காட்டிய நிலையில்,திரைத்துறைக்கான இந்தி எதிர்ப்பு பட்டியலில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.