டாக்கா, (வங்கதேசம்) ஜூன் 6- வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 பேர் பலியாகினர். வங்கதேசத்தின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில் அமைத்துள்ள தனியார் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 40 பலியாகி யுள்ளனர். கண்டெயினரிலும் தீ பரவியதால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெராக்சைடு மூலம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று உள்நாட்டு கொள் கலன் கிடங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நூருல் கய்யூம் யுஎன்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஞாயிறு பிற்பகல் மூன்று மணி வரை 40 பேர் பலியாகியுள்ளனர்.