tamilnadu

பாலியல் புகார் தள்ளுபடி!

புதுதில்லி, மே 6-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று 3 நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் கூறியுள்ளது. விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்ற பொதுச் செயலாளர் திங்களன்று (மே 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் பாலியல் புகார் தெரிவித்தது தொடர்பாக அமைக்கப்பட்ட உள் அரங்கு விசாரணை ஆணையம் மே 5ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் புகாரை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

;