tamilnadu

img

கோவிட்-19 : சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,640 ஆக உயர்வு

சென்னையில், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 17,728 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 646 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 11,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 89 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,504 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில், அதிகபட்சமாக  ராயபுரத்தில் 2,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 22 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க.நகரில்  1,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர்.