tamilnadu

img

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு... 

சென்னை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலும், மேகமூட்டமும் கலந்து மாறுபட்ட வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்றல் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் லேசான அளவில் மழைக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்," தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நகரில் லேசான மழை பெய்யக்கூடும். குறிப்பாக அடுத்த 4 நாட்களுக்கு காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

;