tamilnadu

img

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

சென்னை:
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்குவாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக் கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள் ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.