tamilnadu

img

விசாகப்பட்டினத்தில் விழாக்கோலம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வெள்ளி விழா மாநாடு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) வெள்ளிவிழா மாநாடு ஜனவரி 27 திங்களன்று எழுச்சியுடன் துவங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை விசாகப்பட்டினத்தில் பல்வேறு வீதிகளில் சகோதர இயக்கங்கள் மலர்தூவி வரவேற்றன. இதையடுத்து நடைபெற்ற மாநாட்டு கொடியேற்று நிகழ்வில் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் பங்கேற்று பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்போம், இந்திய பொருளாதாரத்தைப் பாதுகாப்போம், இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என எழுச்சிமிகு முழக்கங்களை எழுப்பினர்.

;