சென்னை, மே 9- தமிழ்நாட்டில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி நிர்வாகங்கள் ஆண்டு தோறும் சொத்து வரியை உயர்த்திக்கொள்வதற்கு வழி வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திங்களன்று(மே 9) இரண்டு சட்டமசோதாக்களை தாக்கல் செய்தார். அதில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்து வதற்கு நகராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக பேரூராட்சி கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை நிரு வகிக்கும் சட்டங்கள் மற்றும் 1978 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் பல்கலைக்கு முதல்வரே வேந்தர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்பதற்கு மாறாக அரசு (முதல்வர்), அவர் என்பதற்கு மாற்றாக அவர்கள் (துணை வேந்த ராக அமைச்சர்) என்று சட்டத் தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ள தாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள் ளது.