இந்தியாவில் தொழிற்சங்கம் உருவாகி நூறாண்டுகள், சிஐடியு துவங்கி ஐம்பது ஆண்டுகள். அதன் பொன்விழா நடைபெறும் இதே ஆண்டில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம் மேளனம் துவங்கி 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுவது என்பதும் சிறப்பான அம்சமாகும். 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,8 தேதிக ளில் சென்னiயில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலா ளர் சம்மேளனம் என்ற அமைப்பை சிஐடியு கம்பீர மாக துவக்கியது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சிஐடியுவிற்குள் நடைபெற்றது வந்த விவாதங் கள், துறைவாரி சம்மேளனங்களை ஏற்படுத்து வதன் மூலமே குறிப்பிட்ட துறையில் உள்ள தொழிலாளர்களை கூடுதலாக திரட்ட முடியும் என்ற தொலைநோக்கு பார்வையிலும் தான் ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் உருவாக வழிவகுத்தது என்று சொன்னால மிகையாகாது. வெறும் 3000 உறுப்பினர்களோடு துவக்கப்பட்ட சம்மேளனம் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் ஆட்டோ தொழிலாளர்களுக்காக வலுவாக குரல் கொடுக்கும் அமைப்பாக மாறியுள்ளது.
25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடும் நேரத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட கிளை, பகுதி மாவட்டம், மாநிலம் என்ற கட்டமைப் புடன் செயல்படக்கூடிய ஒரே சங்கம் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எங்கு ஒரு ஆட்டோ தொழிலாளி பாதிக்கப் பட்டாலும் அந்த தொழிலாளிக்காக கருத்துச் சொல்கிற அமைப்பாக மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி குரல் கொடுக்கிற அமைப்பாக வும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் தான் இருக்கிறது.
சம்மேளன வரலாறு
முதலாளித்துவ கட்சிகள் ஆட்டோ தொழிலா ளிகளை அடியாட்களாக பார்த்தன. தனிநபர் கட்டுப்பாட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் இருந்தனர். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அமைப்பு ரீதியாக திரட்டி செயல்படுத்திட சிஐடியு சங்கம், செங்கொடி இயக்கம் களத்தில் இறங்கிய போது ஆளும்வர்க்க பத்திரிக்கை களும், அதிகாரிகளும் நமது சிஐடியு சங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த னர். செங்கொடி சங்கம் தியாகம் செய்த சங்கம். அவர்கள் ஆட்டோ தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கலாமா என்ற முறையில் விமர்சித்தனர். அப்போது நமது சங்கத்தினுடைய மதிப்பு மிக்க சங்கத்தலைவர்கள் தோழர்.பி.இராமமூர்த்தி, வி.பி.சிந்தன், கே.ரமணி, ஹரிபட், தங்கம் போன்ற வர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தக் கூடிய ஆட்டோ தொழிலாளர்களை சிலருடைய பிடியிலிருந்து மீட்டு எடுக்கவேண்டும். செங் கொடி இயக்கம் அவர்களிடம் பணிசெய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்ற முறையில் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் சங்கங்களை உருவாக்கி செயல்பட்டார்கள்.
ஆட்டோ தொழிலாளர்களிடம் நமது தலைவர் கள் சென்ற போதுதான் தெரிகிறது. ஆட்டோ தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் 95 சதவீதம் பேர் தங்களின் குடும்ப கஷ்டத்தை போக்குவதற் காகத்தான் இந்த தொழிலுக்கு வந்துள்ளார்கள். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,70,000 பெர்மிட்டுகள் கொடுக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களாக மட்டும் இல்லாமல் இந்த தொழி லோடு சம்பந்தப்பட்ட டிங்கர், பெயிண்டர், லயனர், டாப்அடிப்பவர் என 7,00,000 பேருக்கு வாழ்க்கை கொடுக்கும் தொழிலாக ஆட்டோ தொழில் இயங்கி வருகிறது. இந்த 7 இலட்சம் பேரையும் அமைப்புக் குள் கொண்டுவருவது தான் நமது சம்மேளனத் தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் ரிக் ஷா ஓட்டியவர்கள் இத் தொழிலில் கூடுதலாக ஈடுபட்டார்கள். தற்போது படித்துவிட்டு வேலைகிடைக்காத சூழலில் இளை ஞர்கள் இத்தொழிலுக்கு சுய தொழில் என்று வருகிறார்கள். மேலும் கிராமப்புறங்களில் விவசாயம் பாதிக் கப்பட்டதால் இத்தொழிலுக்கு வருகிறார்கள். பல நகரங்களில் செயல்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்களாக வருகிறார் கள். சமூகத்தில் மிக முக்கியமான பகுதியினராக மாறியுள்ள ஆட்டோ தொழிலாளர்களை, அரசாங் கம் தொழிலாளி என்ற முறையில் அவர்களை அணுகுவதில்லை. அரசாங்கக் கொள்கையின் காரணமாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். காப் பீட்டு கட்டணம் உயர்வு, டீசல் பெட்ரோல் விலை உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவ லங்களில் வசூல் செய்யப்படுகின்ற கட்டணங்கள் உயர்வு, காவல்துறை அவ்வப்போது மறைத்து செய்யும் கட்டாய வசூல் என்ற முறையில் இவர்கள் வருமானத்தில் பெரும்பகுதியை அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய நெருக்கடியில் இத்தொழிலா ளர்கள் இருந்து வருகிறார்கள்.
நேர்மையும் சேவையும்
இருந்தபோதும் இந்த தொழிலாளிகள் தங்களுடைய நேர்மையை மட்டும் ஒருபோதும் விட்டுகொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் தங்களது வாகனங்களில் பயணம் செய்யும் போது தவறவிடுகின்ற நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கிற போக்கு இவர்களிடம் இருக்கிறது. கோவை, சென்னை, மதுரை, உளுந்துபேட்டை, வேலூர், திருச்சி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இலட்சக்கணக்கான ரூபாய்களை ஆட்டோவில் தவறவிட்டபோதும் 40 பவுனுக்குமேல் ஆட்டோ வில் தவறவிட்டபோதும் அவற்றை எல்லாம் அப கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையை நாடிய குணம் ஆட்டோ தொழிலாளர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆட்டோ தொழிலா ளர்கள் அனைவருமே சிஐடியு சங்கத்தின் அங் பத்தினர் என்பது சம்மேனத்திற்கு கிடைத்த பெரு மையாகும்.
35 மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக செயல் படுகிற சங்கமாக நமது சம்மேளனம் இருக்கிறது. மாநில அளவில் மட்டுமல்ல, மாவட்டத்தில் ஆட்டோ ழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல்கொடுக்கும் அமைப்பாக மட்டுமல்லாமல், பல்வேறு சமூக சேவைகளையும் செய்யும் அமைப்பாக சிஐடியு ஆட்டோ சங்கம் செயல் படுகிறது. குறிப்பாக நெல்லை போன்ற மாவட்டங் களில் பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுப்பது, தவறுகளை கண்டுபிடிக்கும் சிசிடிவி கேமராக்களை வாங்கி வீடுகளில் பொருத்துவது போன்ற கடமைகளையும் நிறைவேற்றி வரு கிறது. தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் நூற்றுக்க ணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் இரத்ததா னம் செய்துள்ளனர். இன்றைக்கும் பெண்களு டைய பிரசவத்திற்கு பணம் வாங்காத மனம் படைத்தவர்களாக ஆட்டோ தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இப்படி தங்களுடைய உரிமைகளுக்காக மட்டுமல்ல எந்தப்பகுதியினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கிற அமைப்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
வரும் காலத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள மோட்டார் வாகனச்சட்ட திருத்தத்தை எதிர்த்தும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வலுமிக்க போராட்டங்களை நடத்திட திட்டமிட வேண்டியுள்ளது. இதற்கா கத்தான் தமிழகம் முழுவதும் சம்மேளனம் துவக் கப்பட்ட 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கொண் டாடுவது என முடிவு செய்யப்பட்டு அதன் துவக்க நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் பர மக்குடியில் 25-8-2019 அன்று நடைபெற உள்ளது. இதன் நிறைவு நிகழ்ச்சி 2020 ஆகஸ்ட்டில் சம்மேள னம் துவக்கப்பட்ட சென்னையில் நடத்துவதென அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன.
கட்டுரையாளர்: பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர், சிஐடியு